" இலங்கையின் யாழ்மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்திருக்கிறது மெலிஞ்சிமுனைக் கிராமம். இக்கிராமம் அதன் பெரும்பகுதிப் பொருளாதாரத்திற்கு கடற்றொழிலையே நம்பியிருக்கிறது. கடல் , பனை வளங்களைக்கொண்டிருக்கும் இக்கிராமத்தில் தோணிசெய்யும் தச்சுக்கலைஞர்களும், கட்டடக் கலைஞர்களும் தொழிலாளர்களாக இருக்கின்றனர். இம்மக்கள் கத்தோலிக்கர்களாக இருப்பதால் இங்கு கிறிஸ்து அரசர் ஆலயம் ஒன்றும், கடற்கரைப்பகுதிகளில் அந்தோனியார் ஆலையம், சூசையப்பர் ஆலையம் என்பவற்றோடு கடல் நடுவில் 'நரையாம்பிட்டி' அந்தோனியார் ஆலையத்தையும் கட்டி வழிபட்டு வருகின்றனர். இக்கிராமத்தார் தமது பாரம்பரியச் சொத்தாக தென்மோடி நாட்டுக்கூத்தினை கட்டிக்காத்து வருகின்றனர். "
Anynomous
" இலங்கையின் யாழ்மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்திருக்கிறது மெலிஞ்சிமுனைக் கிராமம். இக்கிராமம் அதன் பெரும்பகுதிப் பொருளாதாரத்திற்கு கடற்றொழிலையே நம்பியிருக்கிறது. கடல் , பனை வளங்களைக்கொண்டிருக்கும் இக்கிராமத்தில் தோணிசெய்யும் தச்சுக்கலைஞர்களும், கட்டடக் கலைஞர்களும் தொழிலாளர்களாக இருக்கின்றனர். இம்மக்கள் கத்தோலிக்கர்களாக இருப்பதால் இங்கு கிறிஸ்து அரசர் ஆலயம் ஒன்றும், கடற்கரைப்பகுதிகளில் அந்தோனியார் ஆலையம், சூசையப்பர் ஆலையம் என்பவற்றோடு கடல் நடுவில் 'நரையாம்பிட்டி' அந்தோனியார் ஆலையத்தையும் கட்டி வழிபட்டு வருகின்றனர். இக்கிராமத்தார் தமது பாரம்பரியச் சொத்தாக தென்மோடி நாட்டுக்கூத்தினை கட்டிக்காத்து வருகின்றனர். "
28 June 2023